மதுரை: வரும் 11-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
50% இருக்கைகளுடன் இயங்கும் சூழலில் தியேட்டரில் காட்சிகளை அதிகப்படுத்துவது பற்றியும் தகவல் தேவை எனவும் தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதி கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. எனவே மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என மதுரைக் கிளை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.
மத்திய அரசு எதிர்ப்பு
பொங்கல் முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது. எனவே 100% பார்வையாளர்களை ஒரே நேரத்தில் அனுமதித்தால் கொரோனா பரவும் சூழல் ஏற்படும். ஆகவே தமிழக அரசு அளித்த அரசாணையை உடனே திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.