கல்வராயன்மலை அடிவாரத்தில் 42 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் 20 அடி தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக கோமுகி அணையின் நீர் மட்டம் கடந்த 5 நாட்களில் 13 அடி அதிகரித்து தற்போது 33 அடியாக உயர்ந்துள்ளது.இதனால் விவசாயீகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் மூன்று போக விவசாயத்திற்க்கு விவசாயீகள் தயாராகி வருகின்றனர்.மழையில்லமால் கிணற்று நீரை நம்பியிருந்த விவசாயீகள் தற்போது பெய்து வரும் மலையின் காரணமாக மிகவும் மகிழ்ச்சியடைவதோடு விவசாய கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்