கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களின் அணிவகுப்பால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமலும், நோயாளிகளும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.அரசு மருத்துவமனை முன் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவுக்குச் செல்லும் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட வார்டு துவக்கப்பட்டது.இதனால் மருத்துவமனையின் மகப்பேறு, குழந்தைகள் நலம் உள்ளிட்ட மற்ற பிரிவுகளுக்கு என தனி வழி ஏற்படுத்தப்பட்டது. இந்த வழியாக தினமும் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.அத்துடன் ஆம்புலன்ஸ்களும் சென்று வருகின்றன. ஆனால், இந்த நுழைவுவாயிலின் முன்பாக தேவையற்ற தள்ளு வண்டி கடைகள், பைக்குகள் வரிசையாக நுழைவு வாயிலையும் அடைத்தவாறு நிறுத்தியுள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வழியின்றி தவிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Updated:
அரசு மருத்துவமனை முன் அவலம்
Must Read
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
2021 சுசுகி ஹயபுசா!!
2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
...
2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா ?
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
...
- Advertisement -
Latest News
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
More Articles Like This
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...